உம்மையன்றி யாருமில்லை

 

 

உம்மையன்றி யாருமில்லை

உலகில் தெய்வம் வேறுயில்லை

உளையான சேற்றினின்று தூக்கிகொண்டீரே

உமக்கு உகந்ததாய் வனைந்து என்னை நடத்துகின்றீரே

 

உம்மை ஆராதிப்பேன் (6)

 

தாயின் கருவில் தோன்றும் முன்னே கண்டுகொண்டீரே

தயவாய் என்னை இம்மட்டும் நடத்தி வந்தீரே -என்னை(2)

தனிமையானபோது எனக்கு துணையாய் நீPரே

தாங்கும் கரமாக என்னை தாங்கிகொண்டீரே - உம்மை

 

உடல் சோர்ந்து என் நாவு வறண்டுபோனாலும்

எந்தன் நாவு சொல்லும் ஒரே நாமம் இயேசையா(2)

தாகம் என்ற போது ஜீவ ஊற்றாய் ஆனீரே

ஜீவதண்ணீர் எனக்கு தந்து தாகம் தீர்த்தீரே - உம்மை

 

முதுமை வந்து மரணம் என்னை அணுகினாலும்

எந்தன் (மன)கண்கள் காணும் கடைசி ரூபம் இயேசையா(2)

கண்கள் காண கெஞ்சும்

என் ஆத்துமா உம்மிடம் தஞ்சம் - உம்மை