உம்மையன்றி
யாருமில்லை
உம்மையன்றி யாருமில்லை
உலகில் தெய்வம் வேறுயில்லை
உளையான சேற்றினின்று தூக்கிகொண்டீரே
உமக்கு உகந்ததாய் வனைந்து என்னை நடத்துகின்றீரே
உம்மை ஆராதிப்பேன் (6)
தாயின் கருவில் தோன்றும் முன்னே கண்டுகொண்டீரே
தயவாய் என்னை இம்மட்டும் நடத்தி வந்தீரே -என்னை(2)
தனிமையானபோது எனக்கு துணையாய் நீPரே
தாங்கும் கரமாக என்னை தாங்கிகொண்டீரே - உம்மை
உடல் சோர்ந்து என் நாவு வறண்டுபோனாலும்
எந்தன் நாவு சொல்லும் ஒரே நாமம் இயேசையா(2)
தாகம் என்ற போது ஜீவ ஊற்றாய் ஆனீரே
ஜீவதண்ணீர் எனக்கு தந்து தாகம் தீர்த்தீரே - உம்மை
முதுமை வந்து மரணம் என்னை அணுகினாலும்
எந்தன் (மன)கண்கள் காணும் கடைசி ரூபம் இயேசையா(2)
கண்கள் காண கெஞ்சும்
என் ஆத்துமா உம்மிடம் தஞ்சம் - உம்மை